அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. பிரமுகரை தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை திங்கட்கிழமை இரவு போலீசார் கைது செய்தனர். அதன்பின் அவரை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணன் முன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து,அவர் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஜாமீனில் விடுவிக்க கோரும் மனு மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் பூந்தமல்லி சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புதன் கிழமை மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு மார்ச் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
![அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது:மார்ச் 9வரை சிறையில் அடைக்க உத்தரவு 1 Screenshot 2022 02 23 11 48 37 589 com.miui .gallery](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/Screenshot_2022-02-23-11-48-37-589_com.miui_.gallery.jpg)