கோயம்புத்தூர் திருப்பூர்
விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்த வடிவில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து,
விசைத்தறியாளரின் 53 நாள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கியது.
தமிழகத்தில் கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளது.
கூலி உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஜன., 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக இறுதி பேச்சு வார்த்தை பிப்., 28ல், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதில் விசைத்தறி யில் நெசவு செய்யும்
சோமனுார் ரகத்துக்கு 19% இதர ரகத்துக்கு 15 % கூலியை உயர்த்தி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்; இந்த ஒப்பந்தத்தை ஒரு வார காலத்துக்குள் மேற்கொண்டு, நகலை கோவை மற்றும் திருப்பூர் தொழிலாளர் நலத்துறைக்கு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப் பட்டது.
இதை ஏற்று, இரு தரப்பினரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இதனால் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால்
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் விசைத்தறிகள் முழுமையாக இயங்க துவங்கியது.