கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் இன்று நடைபெறும் அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் அய்யா வழி பக்தர்கள் ஊர்வலமாக யாத்திரை செல்லும் நிகழ்வு கோலாகோலமாக நடந்தது.இவ்விழாவையொட்டி
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமித்தோப்பில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயா வைகுண்டர் ஆலயத்தில் ஐயா அவதார தின விழா இன்று வெள்ளி க்கிழமை அதிகாலை துவங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐயா வைகுண்டர் அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து தாழக்கிடப்பாரை ‘தற்காப்பதுவே தர்மம்‘ என்று கூறி அனைத்து சாதி மக்களையும் ஒன்றிணைத்தார். ஐயா வைகுண்டர்ரை பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக நினைத்து மக்கள் வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் மாசி 20ம் தேதி அய்யா வைகுண்டரின் அவதார தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
அதே போல இந்த ஆண்டு இன்று மார்ச் 4ம் தேதி வைகுண்டரின் 190 வது அவதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இவரின் அவதார தினத்தில் தலைமை பதி அமைந்துள்ள சாமித்தோப்பில் திருவிழா நடைபெறும். இந்த விழாவில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்றுள்ளனர்.வெவ்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் பாதயாத்திரையாக சாமி தோப்புக்கு வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.அய்யா வைகுண்டர் 190வது அவதார தின விழாவையொட்டி,
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.