கும்பகோணம் மாநகராட்சியில் ஆட்டோ ஓட்டிய காங்கிரஸ் கட்சி பிரமுகர்சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்
மொத்தம் உள்ள 48 வார்டு டுகளில்இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் 42 இடங்களில் வென்று மாநகராட்சியை கைப்பற்றின. தி.மு.க. 37 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. 3 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற 48 வேட்பாளர்களும் மாநகராட்சி கவுன்சிலராக பதவி ஏற்றுக்கொண்டனர். அறுதி பெரும்பான்மை வெற்றியை ருசித்த தி.மு.க. கூட்டணிக்கு கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயரை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்து உள்ள நிலையில் இன்று மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது.. மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு அளித்து உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 17-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தி.மு.க. கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளதால் சரவணன் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு மேயராக பதவியேற்றார்.
இவர் ஆட்டோ டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![கும்பகோணம் மாநகராட்சி மேயராக ஆட்டோ ஓட்டுனர் பதவியேற்பு.. 1 1646380584355](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/1646380584355.jpg)