உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.
தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையாக இதுவரை ரூ3.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனில் இன்று
மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டினர் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக ரஷ்யா இன்று அறிவித்துள்ளது.
உக்ரைன் பிடிவாதத்தால் தற்காலிக போர் நிறுத்தம் பலனளிக்கவில்லை; மக்கள் வெளியேறுவதை தடுப்பதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.இன்று மரியுபோல், வோனோவாகா நகரங்களில் மீண்டும் சண்டையை தொடங்கி கெர்சான் ராணுவ தளங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின.