- Ads -
Home சற்றுமுன் சீர்காழி அருகே சோகம் -மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை பலி…

சீர்காழி அருகே சோகம் -மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை பலி…

Dhinasari Home page

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன்,அவரை காப்பாற்ற சென்ற மனைவி, மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நிவாஸ் ரத்தினம்.கொத்தனார் வேலை செய்யும் இவர் தனது மாடிவீட்டில் பழுதடைந்த மின்சார ஸ்விட்சை சரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிவாச ரத்தினத்தை மின்சாரம் தாக்கி உள்ளது. அதனைக் கண்ட அவரது மனைவி ஹேமா இடுப்பில் தனது ஒரு வயது மகள் நிஹன்யாவை தூக்கிக்கொண்டு கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கணவன், மனைவி மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version