- Ads -
Home சற்றுமுன் காஞ்சிபுரம்: ஏடிஎம் இல் திடீரென அடித்த அலாரம்! காரணம்.‌!

காஞ்சிபுரம்: ஏடிஎம் இல் திடீரென அடித்த அலாரம்! காரணம்.‌!

atm

காஞ்சிபுரத்தில் வங்கி ஏ.டி.எம் ஒன்றில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காஞ்சிபுரம் பகுதியில் காமராஜ் வீதியில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கிக்கு வெளியில் வாடிக்கையாளர்களின் பணபரிவர்த்தனைக்கான ஏ.டி.எம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் நேற்று வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக்கொண்டு சென்றிருந்த நேரத்தில் காலை 11:30 மணிக்கு திடீரென்று அலாரம் ஒலிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

6 மாதங்களாக ஏ.டி.எம் மையத்தில் இருக்கும் பாதுகாப்பு அலாரம் பழுதடைந்துள்ளது. எனவே, அவ்வப்போது இவ்வாறு அலாரம் ஒலிப்பது வழக்கமாகியுள்ளது. 6 மாத காலங்களாக பழுதாகியும் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுவும் பின்னர் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version