- Ads -
Home சற்றுமுன் ஏப்ரல் 1 முதல் விரைவு இரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே!

ஏப்ரல் 1 முதல் விரைவு இரயில்கள் மீண்டும் இயக்கம்: தெற்கு ரயில்வே!

#image_title
train service

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திருப்பதி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக பல சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், படிப்படியாக ரத்து செய்யப்பட்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் திருப்பதி- புதுச்சேரி விரைவு ரயில் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்சேவை, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி,வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து திருப்பதி -புதுச்சேரி( எண்:16111) இடையே அதிகாலை 4.20 மணிக்கும், மறுமார்க்கத்தில் புதுச்சேரி-திருப்பதி(16112) இடையே பிற்பகல் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதனைப் போல் , சூலூர்பேட்டை-நெல்லூர்(06747) -நெல்லூர்-சூலூர்பேட்டை(06748), திருவனந்தபுரம் சென்ட்ரல்-நாகர்கோவில்(06433) -நாகர்கோவில்-திருவனந்தபுரம் சென்ட்ரல் (06428) போன்ற விரைவு ரயில்களும் வருகின்ற 1 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளன.

இதையடுத்து மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை(06743) -சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட்(06744) இடையே இயக்கப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வரும் அடுத்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version