- Ads -
Home சற்றுமுன் தஞ்சாவூர் அருகே தேர்விபத்து-ஜனாதிபதி இரங்கல்..

தஞ்சாவூர் அருகே தேர்விபத்து-ஜனாதிபதி இரங்கல்..

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில் சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மிகப்பெரிய சோகம். அவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரம் தாக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என அவர் கூறி உள்ளார்.மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி,தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

gallerye 054948629 3016983 2

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version