- Ads -
Home சற்றுமுன் இலங்கைக்கு 310 ரன் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

இலங்கைக்கு 310 ரன் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை அணிகள் மோதும் 22வது லீக் சுற்றுப் போட்டி இன்று நியூசிலாந்து தலைநகர் வெலிங்க்டன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ்வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் அலி 15 ரன் எடுத்தார். பெல் 49 எடுத்தார். பாலன்ச் 6 ரன் எடுத்த போதும், பின்னர் வந்த ரூட் நின்று நிலைத்து ஆடி 121 ரன் எடுத்து அணியின் ஸ்கோர் அதிகரிக்க உதவினார். மோர்கன் 27ம், டெய்லர் 25ம் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்தது. இலங்கை தரப்பில் பந்துவீச்சாளர்கள் 6 பேரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 310 ரன் என்ற இலக்கை நோக்கி இலங்கை ஆடத் தொடங்கியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version