- Ads -
Home சற்றுமுன் குலதெய்வ வழிபாடு பற்றி ஆளுநர் பேசினாரா? பொய்ச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை?

குலதெய்வ வழிபாடு பற்றி ஆளுநர் பேசினாரா? பொய்ச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை?

மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன்

governor ravi in ayya vaikundar function

குலதெய்வ வழிபாடு குறித்து ஆளுநர் ஆர் எம் ரவி பேசியதாக ஊடகத்தில் போலி செய்தி வெளியானதை அடுத்து காவல்துறை நடவடிக்கைக்கு ஆளுநர் மாளிகை புகார் மனு அளித்துள்ளது.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் (செய்தி வெளியீடு எண்: 31 : 24.06.2024)

மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது

“குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்; தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும் – ஆளுநர் ரவி” என சில ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பகிரப்படுகின்றன.

இந்த விஷயத்தில் இதுபோன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.

இந்தப் போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது.

இந்தப் பிரச்னையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

– என்று, அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் நடைபெற்ற முறைகேடுகளை பூசி மெழுகி மறைக்கும் வேலைகளில் ஆளும் தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் இந்த நேரத்தில், தமிழக ஊடகங்களில் இது போன்ற போலியான தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் குரூரத் தனத்தை மத்திய ஒலிபரப்புத் துறையும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் தமிழக அமைச்சரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூகத் தளங்களில் பலரும் கடும் கோபத்துடன் கருத்துகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version