- Ads -
Home சற்றுமுன் மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் வெளியானதால் மாணவி தற்கொலை: மாணவன் கைது

மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் வெளியானதால் மாணவி தற்கொலை: மாணவன் கைது

 

மும்பையில் 10ம் வகுப்பு மாணவியின் ஆபாச படம் பேஸ்புக்கில் ஆபாச படம் வெளியானதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபாச படத்தை வெளியிட்டதாக அம்மாணவியின் சக வகுப்பு மாணவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகர் மிரா சாலையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவரை, அவருடைய வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சக மாணவனை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

அதனால்அந்த மாணவர் மாணவி மீது கோபத்தில் இருந்துள்ளார். மாணவியைப் பழி வாங்கும் விதத்தில் போலி பேஸ்புக் பக்கத்தைத் துவக்கிய மாணவர், அந்த பக்கத்தை பயன்படுத்திஅந்த மாணவி குறித்து ஆபாசமான படங்களை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அறிய வந்த அந்தமாணவி, அவமானம் தாங்காமல் தனது குடியிருப்பு கட்டிடத்தின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து கடந்த 20-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அந்தமாணவனின் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்

இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த மாணவனின் செல்போன், கம்யூட்டர் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர் மாணவனை மும்பை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவனை இளம் சிறார் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அந்த மாணவனை காவல் துறையினர் மும்பை இளம் சிறார் சிறையில்அடைத்தனர்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version