- Ads -
Home சற்றுமுன் தமிழக காவல்துறை பெண் ஆய்வாளர் மீது நடிகை ஹேமலதா காவல் ஆணையரிடம் புகார்

தமிழக காவல்துறை பெண் ஆய்வாளர் மீது நடிகை ஹேமலதா காவல் ஆணையரிடம் புகார்

 சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் வசிப்பவர் நடிகை ஹேமலதா. நடிகையான இவர் புல்லுக்கட்டு முத்தம்மா என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். சினிமா தயாரிப்பாளராகவும் உள்ளார். இவர் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய கணவர் இளையராஜா மீதும் 2–வது திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யும் அவரது தந்தை ராஜா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனு கொடுத்தார்.
 
இந்த மனு சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.இதை தொடர்ந்து மகளிர் போலீசாரும் நடிகை ஹேமலதாவையும் அவரது கணவர் இளைய ராஜாவையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது .
 
இந்த நிலையில் நடிகை ஹேமலதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மீண்டும் புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம்கூறியதாவது:–
 
புகார் குறித்து திருமங்கலம் மகளிர் போலீஸ் காவல் ஆய்வாளர் ஐமுனா ராணி விசாரணை நடத்தினார். மகளிர் போலீசார் எனது கணவருக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட என்னை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
 
மேலும் அவதூறான வார்த்தைகளாலும் மகளிர் காவல் ஆய்வாளர் உட்ப்பட போலீசார் திட்டினர். எனவே எனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என காவல் ஆணையரிடம் அவர் கொடுத் புகாரில் தெரிவித்ததாக நடிகை ஹேமலதா செய்தியாளர்களிடம் கூறினார்.
 

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version