இளம்பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது ஆண்டுதோறும் மெக்சிகோவில், அதிகரித்து வருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தினந்தோறும் குறைந்தபட்சம் 30 பேராவது என்னை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று மெக்சிகோ நாட்டின் டெனன்சிங்கோ பகுதியைச் சேர்ந்த பெண், ‘‘திடுக்’’ தகவல் கூறியிருப்பதோடு, சுமார் 43,200 முறை தான், பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டு தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் கர்லா ஜெசிண்டோ என்ற 23 வயது பெண் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ள்ளதாவது:
வசதியான வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதா
க ஆசை காட்டி என்னை ஒருவன், டிலாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள டெனன்சிங்கோவிற்கு அழைத்து சென்றான். மெக்சிகோவில் அங்குதான் பாலியல் தொழில் அதிகளவில் நடைபெறுவது எனக்குத் தெரியாது.
என்னை அழைத்துச் சென்றவனுடன் 3 மாதங்கள் தங்க வேண்டியதானது. அங்கு சென்ற பின்னர், நிலைமையை புரிந்து கொண்டேன். அங்கிருந்து தப்பிப்பது கனவிலும் நினைக்க முடியாதபடியாக இருந்தது. அதன்பின், பாலியல் தொழிலில் என்னை அவன் தள்ளினான். நான்காண்டுகளாக நான் பட்ட துயரங்கள், உலகில் எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது. காலை 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை நரக வேதனை நீடிக்கும். பலமுறை சங்கிலியால் அடித்து, கீழே தள்ளி ஏறி மிதித்தும் என்னை கொடுமைப்படுத்தினர். இவ்வாறு கர்லா கூறியுள்ளார்.
ஆண்டு தோறும், 20,000 பெண்கள் பாலியல் தொழிலுக்காக மெக்சிகோவிற்கு கடத்தப்படுகிறார்கள் என சர்வதேச புலம்பெயர் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பாலியல் பெண்களில் 10 பேரில் ஒருவர் டெனான்சிங்கோவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.