- Ads -
Home சற்றுமுன் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு

ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு

சென்னை: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 107% ஆக இருந்த அகவிலைப்படியை 113% ஆக 2015 ஜன., 1ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் உள்ளாட்சி மன்றக் கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் ஏனைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என நிதித்துறை முதன்மை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version