நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்கு தமிழக அரசு தான் காரணம் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், நீட் கேள்வித்தாளை தயாரிப்பதற்கு தமிழக அரசு எந்தவொரு மொழிப் பெயர்ப்பாளர்களையும் பரிந்துரைக்கவில்லை என்றார். சிபிஎஸ்இ வல்லுநர்களை வைத்தே வினாத்தாள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என கூறிய அவர், இந்த குளறுபடிகளுக்கு முழு பொறுப்பு சிபிஎஸ்இ தான் என தெரிவித்தார். இதற்கும் தமிழக மொழிப் பெயர்ப்புத்துறைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.