தென்காசி : நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே டெங்கு காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருக உள்ள வடக்கு பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் லிங்க முருகன். இவரது 3 – வயது மகள் ஷிவானியா
இவருக்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரது ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.