குழந்தைகள் இப்போது பாடும் பாடல்கள் மிகவும் வேதனை அளிக்கின்றன. டாடி மம்மி வீட்டில் இல்லை என்று பாடுகிறார்கள் என வேதனை தெரிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
தேசிய குழந்தைகள் தினமாக அரசால் கொண்டாடப் படும் நேருவின் பிறந்த நாள் குறித்து அவர் கருத்து தெரிவித்த போது, திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துக்களை பரப்பினால் குழந்தைகள் நல்லவர்களாக வருவார்கள் என்றார்.
மேலும், திரைப்படங்கள் மூலம் எம்ஜிஆர் நல்ல கருத்துக்களை பரப்பினார், ஆனால் இப்போது டாடி, மம்மி வீட்டில் இல்லை என பாடுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேதனை வெளியிட்டார்.