திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் 64 அடி உயர தங்க கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில் வரும் 23ஆம் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.