புது தில்லி:
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சுஷ்மா விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு தமிழர்களின் மீள் குடியேற்றப் பிரச்னை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் அவரது வருகை குறித்த பயண முன் ஏற்பாடுகள் விஷயமாக பேச்சுவார்த்தை நடத்த வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.