- Ads -
Home சற்றுமுன் ஹெல்மெட் போடாமல் கார் ஓட்டிய பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த காவல்துறை !

ஹெல்மெட் போடாமல் கார் ஓட்டிய பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த காவல்துறை !

 
ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதாக, பாரதிய ஜனதா பிரமுகருக்கு, அபராதம் விதித்து காவல்துறை ரசீது அனுப்பிய அதிர்ச்சி சம்பவம் பெங்களூரில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெங்களூரு மல்லேசுவரத்தில் வசித்து வரும் பாஜக பிரமுகர் பிரகாஷ். அவருக்கு பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து அபராதம் கட்டும்படி ரசீது ஒன்று நேற்று முன்தினம் வந்தது.
அந்த ரசீதுவில் ‘அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்ததோடு, பசவேசுவரா சர்க்கிளில் கடந்த 4-ந் தேதி சென்றபோது பின் இருக்கையில் இருந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதனால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்‘ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த ரசீதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரு மாநகர போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தவறு எந்திர கோளாறு காரணமாக நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது’ என்று கூறியுள்ளார் .
 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version