தமிழகம் முழுவதும் 1,355 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். போக்குவரத்துத்துறை சார்பில் 109 புதிய பேருந்துகள், 40 புதிய சிற்றுந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 27ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் சார்பில் 4 கோடியே 73 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 19 அம்மா உணவகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.