- Ads -
Home உள்ளூர் செய்திகள் கேள்விகளை முன்கூட்டியே தரக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி

கேள்விகளை முன்கூட்டியே தரக் கோரிய சசிகலா மனு தள்ளுபடி

sasikala

சென்னை:

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத் துறை தன்னிடம் கேட்கவுள்ள கேள்விகளை முன்கூட்டியே தன்னிடம் அளிக்க வேண்டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஜெ.ஜெ., ‘டிவி’க்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்ததில் அன்னியச் செலாவணி மோசடி நடந்துள்ளதாக சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது தன்னிடம் கேட்கப்படவுள்ள கேள்விகளை தனக்கு முன்கூட்டியே அளிக்க வேண்டும் எனக் கோரி சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி சசிகலாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version