தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் துண்டிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து ஆலைக்கான மின் விநியோகம் நின்றுபோனது.
ஸ்டெர்லைட் ஆலையில் மே 18, 19ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆலையானது உற்பத்தி செயல்பாடுகளை தொடங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின்இணைப்பையும், வினியோகத்தையும் துண்டிக்குமாறு பரிந்துரை செய்தது.
நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் சட்டப் பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட்டுக்கான மின் இணைப்பு மற்றும் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட்டுக்கான மின்இணைப்பு மற்றும் வினியோகம் வியாழக்கிழமை இன்று அதிகாலை 5.15க்கு துண்டிக்கப்பட்டது.
Entire agitation organised and instigated the church.