- Ads -
Home உள்ளூர் செய்திகள் சென்னை சென்னை-காவல் நிலையம் அருகே 2 பேர் வெட்டிக் கொலை..

சென்னை-காவல் நிலையம் அருகே 2 பேர் வெட்டிக் கொலை..

images 55 2

சென்னை புறநகர் பகுதியான மணிமங்கலம் காவல்நிலையம் அருகே ஜாமினில் வெளியே வந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் காவல் நிலையம் அருகே விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகியோரை 4 பேர் கொண்ட கும்பல் சாலையில் நேற்று இரவு ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து, கொலையாளிகள் 4 பேரும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெளடி தேவேந்திரனை வெட்டிக் கொன்ற வழக்கில் சுரேந்தர், விக்னேஷ், அன்சாரி, சதீஷ், சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஜாமினில் வெளிவந்த விக்னேஷ் மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் பழிவாங்கும் நோக்கில் தேவேந்திரனின் ஆதரவாளர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version