சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் மாணவர் அணியினர் ரத்த தானம் செய்தனர்.
இன்று 28.12.2015 திங்கட் கிழமை, காலை 11.00 மணிக்கு எண்.14, எல்லையம்மன் காலனி 1வது தெரு, தேனாம்பேட்டை, சென்னை – 86 என்ற முகவரியிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர், ஜி.கே.வாசன் 51வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் அணி சார்பில் மாணவர் அணி மாநில தலைவர் எம்.சுனில் ராஜா, தலைமையில் 51 மாணவர்கள் தங்களது முழு உடலை தானம் வழங்கும் நிழ்ச்சியை முன்னாள் எம்.பி., பி.எஸ்.ஞானதேசிகன், மற்றும் மாபெரும் இரத்த தான முகாம் நிகழ்ச்சியை முன்னாள் எம்.பி., எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் துவக்கிவைத்தனர்.
மேலும் இந் நிகழ்ச்சியில் இளைஞர் அணி மாநில நிர்வாகி K.சரவணன், மாணவரணி மாநில துணை தலைவர்கள் மதன், அஸ்வின், மாநில பொதுச் செயலாளர்கள் யுவராஜ், மோகன், மாநில செயலாளர்கள் பிரபாகர், விஜித், முகேஷ், ராம் பிரசாந்த், அனிக்ஸ் மாவட்ட தலைவர்கள் லோகேஷ், ஸ்ரீதர், ஹரி, சங்கர், ராஜா, ராஜவிக்ரம் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் பிரின்ஸ், மணி பாரதி, சுதர்சன், கணேஷ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.