- Ads -
Home உள்ளூர் செய்திகள் சென்னை தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்

தினசரியின் பொங்கல் சிறப்பு பக்கம்; உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்

தினசரி டாட் காம்: முதலாமாண்டு சிறப்பிதழ்!

பொங்கல் திருநாள் சிறப்புப் பக்கம்!

தினசரி டாட் காமில் பொங்கல் சிறப்புப் பக்கம் தயாராகிறது! உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் செய்யுங்கள்!

தினசரி டாட் காம் துவங்கப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. சென்ற 2015ம் வருடம் தை மாத முதல் நாளில் – பொங்கல் திருநாளில் தினசரி டாட் காம் துவங்கப் பட்டது. தமிழகத்தில் இருந்து நடத்தப்படும் ஒரு செய்தித் தளமாக, செய்தியாளர்களால் செய்தியாளர்களுக்கென துவங்கப்பட்ட  ஒரு முயற்சி. இம் முயற்சி வரும் தைப் பொங்கல் திருநாளுடன் ஓர் ஆண்டை எட்டுகிறது. இடையில் எத்தனையோ சோதனைகள், தடங்கல்கள். இவற்றைக் கடந்து இன்று வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கிறோம். இந்த முதலாண்டு சிறப்புப் பக்கங்கள், பொங்கல் சிறப்பு இதழாக தயாராகிறது. பொங்கல் தொடர்பான, உழவர் திருநாள், திருவள்ளுவர் திருநாள், காணும் பொங்கல், மாட்டுப்பொங்கல் என விழாக்கள் தொடர்பான கதை, கவிதை, கட்டுரைகள், செய்திகள், ஆலயங்கள், தமிழர் பாரம்பரியம், கலாசார நிகழ்வுகள் குறித்த தகவல்களை

[email protected]

மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.

வெள்ளிக்கிழமை பொங்கல் தினத்தன்று தினசரி டாட் காமில் தேர்ந்தெடுக்கப்படும் உங்கள் படைப்புகளுடன் பொங்கல் சிறப்பு பக்கம் வெளியாகும்!

நன்றி,

தினசரி இணையம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version