சென்னை:
ஜல்லிக்கட்டு தடை தொடர்பாக கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா தலைவர் ஹெச்.ராஜா, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜல்லிக்கட்டு போட்டி விவகாரம் தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிஉள்ளார்.