தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மையம் கொண்டுள்ளது எனத் தெரிவித்த சென்னை வானிலை மையம், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தள்ளது. மேலும் வடதமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.