சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் இன்று பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடம்பூரைச் சேர்ந்த பஷீர் அகமது மகன் சதாம் உசேன் (30), தனது மகன் அப்துல் பாசித் (4) உடன் , மொபட்டில் வெள்ளிக்கிழமை கிருஷ்ணாபுரத்திலிருந்து கடம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கடம்பூரிலிருந்து கிருஷ்ணாபுரம் நோக்கி, ஜல்லி பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி , பொங்கnளி அம்மன் கோவில் அருகே ,மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் அப்துல் பாசித் (4) சம்பவ இடத்திலேயே பலியானர். சிறுவனின் தந்தை சதாம் உசேன் (30), மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். தந்தை, மகன் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் முருகனைத் தேடி வருகின்றனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![சேலம் மாவட்டம் லாரி-மொபட் நேருக்கு நேர் மோதி தந்தை, மகன் பலி.. 1 kadambur](https://dhinasari.com/wp-content/uploads/2022/06/kadambur.jpg)