![கோவையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., தீவிர சோதனை! 1 nia](https://dhinasari.com/wp-content/uploads/2019/07/nia.jpg)
கோயம்புத்தூரில் 5 இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அல் அமீன் காலனி, பிலால் எஸ்டேட், ஜி.எம்.நகர் உள்ளிட்ட 5 இடங்களில் காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
உக்கடத்தில் ஷனாபர் அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. மேலும், 5 குழுக்களாக பிரிந்து, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.