- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

chozhavanthan draupati amman temple

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் துரோபதை அம்மன் கோவில் வருடாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, பரம்பரை பூசாரிகள் அர்ஜுனன்,திருப்பதி, ஜவர்கலால்,குப்புசாமி, ஆதி பெருமாள் ஆகியோர் புனிதநீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். துரோபதை அம்மனுக்கு திருமஞ்சனம், பால்,பன்னீர் உட்பட 12 அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இக்கோவிலில் உள்ள விநாயகர்,கருப்புசாமி, அகோர வீரபத்திரர், நாககன்னி, கமலக்கண்ணி, சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.பரம்பரை பூசாரிகள் மற்றும் கோவிலைச்சேர்ந்தவர்கள் வருடாபிஷேகவிழா ஏற்பாடுகளை, செய்திருந்தனர். பரம்பரை பூசாரி மற்றும் கோவிலைச் சேர்ந்த குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version