- Ads -
Home ஆன்மிகம் ஆலயங்கள் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..

பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..

images 25 1

இன்று ஆடி பௌர்ணமி ஆவணி அவிட்டம் சுபதினத்தில் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.மிக அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள். மாதந்தோறும் வரும் பௌர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி 11-ந் தேதி இன்று (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. இன்று காலை பௌர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version