ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி முடியும் நிலையில், அடுத்ததாக உலக கோப்பை ஒருநாள் தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. எனவே உலக கோப்பைக்கு தேர்வாகும் வீரர்கள், அதற்கு முன்பாக மே மாத துவக்கத்தில் தொடங்கும் பயிற்சி முகாமில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல்லின் கடைசி வார போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.