- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரை யானைகள் ஊருக்குள் வருவது சகஜமாகி விட்டது!

யானைகள் ஊருக்குள் வருவது சகஜமாகி விட்டது!

கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

elephant in dindukkal

திண்டுக்கல்: பிராணிகள் கடும் வெப்பம் காரணமாக தண்ணீரை தேடி ஊருக்குள் வருவது சகஜமாகி வருகிறது. மலைப் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாலும், போதிய மழை இன்றி கடுமையான குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது.

இதனால், மலைப் பகுதியில் வசிக்கும் பிராணிகளின் மான், யாணை, காட்டெருமைகள் ஆகியவை உணவு மற்றும் குடிநீருக்காக, கிராமத்தில் உள்ள வயல்வெளிகளுக்கு தொடர்ந்து படையெடுத்து வருகிறது. இதனால், விவசாயிகள் வயலுக்கு செல்ல முடியாதபடி உள்ளதாம்.

கொடைக்கானல் புலியூர் பகுதியில், குட்டிகளுடன் காட்டு யானைகள் வலம் வருவதால் மலைக்கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். பழனி வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கொடைக்கானல், வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்துக்கு படையெடுத்துள்ளன.

தற்போது இந்த யானைகள், புலியூர் பகுதியில் உள்ள வருவாய்த்துறை மற்றும் விவசாய நிலங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டு இருப்பதால் விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version