![]()
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையிலான ஓவியத்தைப் பரிசளித்தார் பிரான்ஸ் அதிபர். பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸ்வா ஹொலாண்டை சந்தித்த போது அவர் பிதமர் மோடிக்கு லைப் ஆப் ட்ரீ என்ற தலைப்பிலான ஓவியத்தை பரிசாக அளித்தார். மோடி இது குறித்து தனது ட்விட்டர் பகத்த்தில் செய்தி பகிர்ந்துள்ளார். இந்த ஓவியமானது இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் “ஒரு ஆலமரம் பல வேர்கள் மற்றும் கிளைகள் கொண்டுள்ளது. அது மரத்தின் பழம், விதைகள், தங்குமிடம், கருணை, இனப்பெருக்கத்தைப் குறிப்பது போலும் அமைந்துள்ளது. பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திட்டமிட்டப்படி ஜெர்மனி செல்கிறார்.