இதற்கு இந்தியா கடும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. அதிநவீன திறன் கொண்ட போர் விமானமான எப் 16 ஐ, பாகிஸ்தானுக்கு விற்பனை செய்ய உள்ளதாக ஜூலை 26 அன்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக விவகாரங்களுக்கான செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த விவகாரத்தை டில்லியில் உள்ள அமெரிக்க தூதரிடம் கொண்டு சென்றுள்ளோம்.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாக்., விரும்பினால் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஒருபுறம் கூறி வரும் டிரம்ப், மற்றொரு புறம் பாக்.,க்கு ராணுவ உதவி செய்வதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் இந்த முரண்பாடான செய்கை இந்தியாவின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.