தாமிரபரணி புஷ்கரம் விழாவைக் கைவிட வேண்டும் என்கிறது சி.பி.எம். திமுக., விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., உள்ளிட்ட கட்சிகள்.
அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், தாமிரபரணியில் இது இப்படி நடந்ததாக சரித்திரம் இல்லையாம். இப்போது புதிதாக ஒரு விழா என்று சொல்லி மதவாதத்தைத் திணிக்கிறார்களாம்…
ஆனால் உண்மை அப்படியா?!
கம்யூனிஸ்டுகள் சர்ச் அடிமைகளாய் மக்கள் விரோதிகளாய் ஆகி உள்ளது அனைவரும் அறிவர். தமிழகம் முழுவது ஒவ்வொரு சர்ச்சும் குறைந்தது இத்தனை தன் சர்ச் உறுப்பின கிறிஸ்துவரை பாதயாத்திரையாய் வேளாங்கன்னி அனுப்ப வேண்டும் என திட்டமிட்டு லட்சக்கணக்கானோரை கூட்டியதை விமர்சிக்காது. ஹஜ் என ஏழை முஸ்லிகள் மதவாதப் பயணம் எதிர்க்க மாட்டார்கள்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் விழா நடைபெற்றால் மிக பெரிய அளவில் சுகாதார கேடு ஏற்படும் என்றும் மக்கள் கழிவுகளோடு வாழவேண்டிய சூழல் உண்டாகும் என்றும் கூறினார்.
மேலும், “அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்கும் போது தனியாக ஒரு விழா எடுத்து பாகுபாடு காட்டவேண்டாம். இந்த விழாவை நடத்தாமல் இருக்க அரசைக் கேட்டுகொள்கிறோம்.” எனவும் அவர் வலியறுத்தினார்…. என்கிறது செய்தி.