பேரிக்காய் புத்துணர்வை உடலுக்கு தரக்கூடியது, மேலும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. கிருமி நாசினியாக விளங்கும் இது நுண் கிருமிகளை அழிக்கக கூடியது. பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. வயிற்று புண்களை ஆற்றும்.
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.
மலச்சிக்கலை போக்க கூடியது, தொண்டை புண், வலியை குணப்படுத்த கூடியது, சளி, இருமலை போக்கவல்லதுமான பேரிக்காய். பேரிக்காய் காயாக இருக்கும்போது, அது கெட்டியாக பச்சை நிறத்திலும், பழுத்தபின் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். அதிக நார்ச்சத்து, நீர்சத்து மிகுந்தது. அத்துடன் உடல் சூட்டைத் தணிக்கும், கண்கள் ஒளிபெறும், நரம்புகள் புத்துணர்வடையும் மற்றும் தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும், குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.
பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.இதை பயன்படுத்தி உடலுக்கு புத்துணர்வை தரக்கூடிய மருந்து தயாரிக்கலாம்.
பேரிக்காயை அரைத்து பசையாக எடுத்துகொள்ள வேண்டும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, நீர்விடாமல் பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். பின்னர் ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைக்கலாம். இதனுடன் நீர்விட்டு பருகுவதன் மூலம் உடலில் புத்துணர்வு ஏற்படும். பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்தும்.
கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து
: