![ரெய்டு: அடுக்குமாடி கட்டிடத்தில் விபச்சாரம்! பிரபல நடிகர்கள் இருவர் சிக்கினர்! 1 prostitude](https://dhinasari.com/wp-content/uploads/2020/03/prostitude.jpg)
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார தொழில் நடப்பதாக அம்மாநில போலீஸ்க்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த சொகுசு குடியிருப்பில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள், பல ஆண்கள் மற்றும் அவ்வப்போது அழகான பெண்கள் வந்து செல்வதை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து போலீசார் அந்த குடியிருப்பில் அதிரடியாக புகுந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது நான்கு பேர் பிடிபட்டதாக கூறப்படுகிறது. அதில் இருவர் தொலைக்காட்சி நடிகர்கள் அடங்குவர்.
இவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் மீட்கப்பட்டுள்ளார். பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகர்களான டோராபாபு மற்றும் பரதேசி ஆகியோர் சொகுசு குடியிருப்பில், மேற்கொண்ட அதிரடி ரெய்டில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காமெடியன் டோரா பாபு. கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.