- Ads -
Home இந்தியா பொல்லாத கவலைகள் இமைகளை அழுத்தும் போது இதமளிக்கும் இயற்கை!

பொல்லாத கவலைகள் இமைகளை அழுத்தும் போது இதமளிக்கும் இயற்கை!

nature

பேரழகு கொண்ட இடங்கள் இந்த பூமி முழுவதும் நிறைந்து இருக்கின்றன. இதற்காக தங்களின் வாழ்வை அர்ப்பணித்து, அழகான இடங்களை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் இணையத்தில் பதிவிடுபவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அப்படி ஒருவர் பதிவிட்ட வீடியோ இணைய வாசிகளை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

முதன்முறையாக இந்த வீடியோவை பார்க்கும் யாரும், அசந்துபோவது நிச்சயம். வானுயர கற்பாறைகளின் மீது இசை வாசிப்பது போல் மெதுவாக உருண்டோடி வரும் நீரின் அழகை நீங்கள் இதற்கு முன்பு பார்த்திருக்க முடியாது.

இந்த வீடியோவில் அந்த காட்சி இடம்பெற்றிருக்கிறது. சுற்றிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத உயரத்தைக் கொண்ட கற்பாறைகள் சூழ்ந்திருக்கின்றன.

வட்ட வடிவமாக அமைந்திருக்கும் இந்த இடத்தின் நடுவே, வானத்தில் இருந்து வீழும் நீர்த்துளிகள் அருவியாய் கொட்டுகின்றன.

ஆனால், அந்த இடத்தில் இருந்து நீங்கள் மேல்நோக்கி பார்க்கும்போது வானம் மட்டுமே உங்கள் கண்ணுக்கு தெரியும். தண்ணீர் அங்கிருந்து வருகிறது என்றுதான் நினைப்பீர்கள்.

சூழ்ந்திருக்கும் கற்பாறைகளின் நடுவே மெதுவாக தவழ்ந்து வரும் நீரின் காட்சியைக் காண நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும். இத்தகைய அழகான காட்சியைக் கொண்ட இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.‌ ஆயிரக்கணக்கானோர் பார்த்து, ரசித்து மெய்சிலிர்த்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version