ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ளது.
ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ், பாஜக.,வை பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்று வருகிறது.
5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றிமுகத்தில் உள்ளதால், தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, இந்த வெற்றி குறித்து விவரிக்க செய்தியாளர்களைச் சந்திக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!
இன்று பிற்பகல் 1 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் ராகுல்.
5 மாநில தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தலைமையிலான டி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்கிறது.
5 மாநில சட்டசபை தேர்தல்: முன்னிலை நிலவரம்…
சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்
காங்கிரஸ் – 53
பாஜக – 26
பகுஜன் சமாஜ் – 9
மிசோரம் சட்டசபை தேர்தல்
காங்கிரஸ் – 8
எம்என்எஃப் – 27
பாஜக – 1
தெலுங்கானா சட்டசபை தேர்தல்
டிஆர்எஸ் – 86
காங்கிரஸ் கூட்டணி – 21
பாஜக – 5
5 மாநில சட்டசபை தேர்த