இன்றைய பஞ்சாங்கம் – செப்.21
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
பஞ்சாங்கம்
புரட்டாசி ~* *4 (21.9.2023 ) வியாழன் கிழமை.
வருடம் ~ சோபக்ருத் {சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம் ~ புரட்டாசி மாஸம் {கன்யா மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 10.50 am வரை ஷஷ்டி பின் ஸப்தமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 1.40 pm வரை அனுஷம் பின் கேட்டை
யோகம் ~ ப்ரீத்தி
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 6.06
சந்திராஷ்டமம் ~ மேஷம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ ஸப்தமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இன்றைய (21-09-2023) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : விழிப்புணர்வு வேண்டும்.
பரணி : அனுபவம் கிடைக்கும்.
கிருத்திகை : உழைப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார பணிகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நிதானம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : நம்பிக்கை மேம்படும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பணி மாற்றச் சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணம் ஈடேறும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவாதிரை : தேடல் பிறக்கும்.
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் மனச் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில பணிகளில் மாற்றமான சூழல் அமையும். சிக்கல் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : பொறுமை வேண்டும்.
ஆயில்யம் : மாற்றமான நாள்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் தனவரவுகள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மகம் : ஆதரவு மேம்படும்.
பூரம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரம் : ஆர்வமின்மையான நாள்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.
அஸ்தம் : சுபமான நாள்.
சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கோபமான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
சுவாதி : பேச்சுக்களை குறைக்கவும்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் நிமிர்த்தமான மாற்றங்களில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார வளர்ச்சிக்கான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணைய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். கடன் தொடர்பாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். அலைச்சல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.