இன்றைய பஞ்சாங்கம் செப்.22 – வெள்ளி
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!श्रीरामजयम!!
!!ஸ்ரீ:!!
!!ஸ்ரீராமஜயம்!!
பஞ்சாங்கம்
புரட்டாசி ~ 5 (22.9.20223) வெள்ளி கிழமை.
வருடம் ~ சோபக்ருத்
{சோபக்ருத் நாம சம்வத்ஸரம்}.
அயனம்~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது.
மாதம்~ புரட்டாசி மாஸம் { கன்யா மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.41 am வரை ஸப்தமி பின் அஷ்டமி
நாள் ~ {ப்ருஹு வாஸரம்) வெள்ளி கிழமை.
நட்சத்திரம் ~ 12.40 pm வரை கேட்டை பின் மூலம்
யோகம் ~ ஆயுஷ்மான்
கரணம் ~ வணிஜை
அமிர்தாதியோகம் ~
அசுபயோகம். சுபயோகம்
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம் ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
எமகண்டம்~ மாலை 3.00 ~ 4.30.
குளிகை ~ காலை 7.30 ~ 9.00.
சூரிய உதயம் ~ காலை 6.05
சந்திராஷ்டமம் ~ 12.39 pm வரை மேஷம் ரிஷபம்
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்த திதி ~ அஷ்டமி
இன்று ~
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः |
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ||
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்..
வெள்ளிக்கிழமை ஹோரை
காலை
6-7. சுக்கிரன். சுபம்
7-8. புதன். சுபம்
8-9. சந்திரன். சுபம்
9-10. சனி.. அசுபம்
10-11. குரு. சுபம்
11-12. செவ்வா. அசுபம்
பிற்பகல்
12-1. சூரியன். அசுபம்
1-2. சுக்கிரன். சுபம்
2-3. புதன். சுபம்
மாலை
3-4. சந்திரன் சுபம்
4-5. சனி.. அசுபம்
5-6. குரு. சுபம்
6-7. செவ்வா. அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய ராசிபலன்கள் – 22.09.2023
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : பயணங்கள் சாதகமாகும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : லாபகரமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
மனதில் நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். அசதிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிகளில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் சாதகமாக அமையும். நீண்ட நாள் கவலைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சுபகாரிய செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.
திருவாதிரை : அறிமுகம் சாதகமாகும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : எண்ணங்களை அறிவீர்கள்.
ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாயாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்குத் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிவீர்கள். கவலை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.
அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.
சித்திரை : தடைகளை அறிவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனை தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். சிறு வியாபாரங்களின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : தாமதங்கள் குறையும்.
சுவாதி : ஈடுபாடு உண்டாகும்.
விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
புதிய நபர்களின் நட்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : சுதந்திரம் மேம்படும்.
கேட்டை : வரவுகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
முன்கோபத்தால் சிலரின் நட்புகளை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதை விட சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : நிதானம் வேண்டும்.
பூராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் : புரிதல் மேம்படும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
செயல்படுத்தும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் மேம்படும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். வழக்கு பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : பொறுமையைக் கையாளவும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
வியாபாரத்தில் கொள்முதல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
கலைநயம் மிகுந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் உங்களது தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பார்கள். குடும்ப பெரியவர்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : தேவைகளை அறிவீர்கள்.
ரேவதி : ஆதாயம் ஏற்படும்.
தினம் ஒரு திருக்குறள்
அத்காரம் – 1 – கடவுள் வாழ்த்து : குறள் 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை ‘இருள்’ என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் ‘இருவினையும் சேரா’ என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் – எப்பொழுதும் சொல்லுதல்).
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 பதிகம் – 61 பாடல் – 11
விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.
விளக்கவுரை : விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.
à®…à®°à¯à®®à¯ˆ. பகà¯à®•தà¯à®¤à®¿à®±à¯à®•௠பகà¯à®•ம௠படிகà¯à®•à¯à®®à¯ ஆவலைத௠தூணà¯à®Ÿà¯à®•ிறதà¯. உஙà¯à®•ள௠தினசரி வெறà¯à®±à®¿à®ªà¯†à®± வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•ளà¯. ஆணà¯à®Ÿà®¾à®³à¯ திரà¯à®µà®Ÿà®¿à®•ளே சரணமà¯.
Good.
à®…à®°à¯à®®à¯ˆà®¯à®¾à®© பதிவà¯à®•ளà¯
Very nice
சரி யான நெதà¯à®¤à®¿à®¯à®Ÿà®¿
Crisp presentation of recent news.