இன்றைய பஞ்சாங்கம் மார்ச் 29
||श्री:||
ஸ்ரீ ராமஜெயம்
பஞ்சாங்கம் | 29.03.2023 | புதன்கிழமை
பஞ்சாங்கம்
பங்குனி~ 15 { 29.3.2023 } புதன் கிழமை**
வருடம் ~ சுபக்ருத் வருடம் {சுபக்ருத் நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ சிசிர ருது.
மாதம் ~ பங்குனி மாசம் மாதம் { மீன மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 11.47 pm வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ புதன் கிழமை {சௌம்ய வாஸரம்}
நக்ஷத்திரம் ~ 10.31 pm வரை திருவாதிரை பின் புனர்பூசம்
யோகம் ~ ஸோபனம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
நல்லநேரம் ~ காலை 9.00 ~ 10.00 & மாலை 2.00 ~ 3.00.
ராகுகாலம் ~ மதியம் 12.00 ~ 1.30.
எமகண்டம் ~ காலை 7.30 ~ 9.00.
குளிகை ~ காலை 10.30 ~ மதியம் 12.00.
சூரியஉதயம் ~ காலை 6.16
சந்திராஷ்டமம் ~ வ்ருச்சிகம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி
இன்று* ~ கரிநாள்.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஹோரை புதன்கிழமை
காலை
6-7.புதன். சுபம்
7-8.சந்திரன்.சுபம்
8-9. சனி.. அசுபம்
9-10.குரு. சுபம்
10-11. செவ்வா.அசுபம்
11-12. சூரியன்.அசுபம்
பிற்பகல்
12-1. சுக்கிரன்.சுபம்
1-2. புதன். சுபம்
2-3. சந்திரன்.சுபம்
மாலை
3-4. சனி..அசுபம்
4-5. குரு. சுபம்
5-6. செவ்வா.அசுபம்
6-7. சூரியன். அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (29-03-2023) ராசிபலன்கள்
மேஷம்
இழுபறியான பாகப்பிரிவினைகள் கைகூடும். வேலை செய்யும் இடத்தில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். மனதளவில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அனுகூலமான சூழல் அமையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
அஸ்வினி : மேன்மை உண்டாகும்.
பரணி : ஒப்பந்தம் சாதகமாகும்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.
ரிஷபம்
எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமான உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் மூலம் தனவரவிற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.
ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் விவேகத்துடன் இருக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். சமூக பணிகளில் லாபம் உண்டாகும். கால்நடை மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
திருவாதிரை : ஈர்ப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
கடகம்
உலகியல் வாழ்க்கையை பற்றி புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய செயல்களை செய்வீர்கள். எதிர்பாலின மக்கள் சார்ந்த விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய உணவு உண்பதில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : புதுமையான நாள்.
பூசம் : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
ஆயில்யம் : ஆர்வம் ஏற்படும்.
சிம்மம்
தனவரவில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். மறுமணம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த இழுபறிகள் மறையும். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். இணைய வர்த்தகத்தில் மேன்மை ஏற்படும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரம் : லாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : மேன்மையான நாள்.
கன்னி
செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். மனதில் எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். சுபகாரிய பணிகளை முன் நின்று செய்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஆதரவு மேம்படும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : அனுபவம் கிடைக்கும்.
அஸ்தம் : மாற்றமான நாள்.
சித்திரை : ஆதரவு மேம்படும்.
துலாம்
வியாபார பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாற்றமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
விருச்சிகம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் கோபம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
விசாகம் : நெருக்கடியான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.
தனுசு
உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். சிக்கல்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூராடம் : புரிதல் மேம்படும்.
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
மகரம்
நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூக பணிகளில் ஆதரவு மேம்படும். உத்தியோக பணிகளில் உழைப்புகள் அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அவிட்டம் : உழைப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தந்தை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேல்நிலை கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : ஆர்வம் மேம்படும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
மீனம்
தாயாரின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
ரேவதி : சாதகமான நாள்.
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: அருளுடைமை குறள் எண்: 246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
மு.வ உரை:
அருள் இல்லாதவராய் அறமல்லாதவைகளைச் செய்து நடப்பவர்களை, உறுதிப்பொருளாகிய அறத்திலிருந்து நீங்கித் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்பார்.
இன்றைய பொன்மொழி
ராஜா பர்த்ரு ஹரியின் சுபாஷிதம்
மாதா சமம் நாஸ்தி சரீர போஷணம்
சிந்தா சமம் நாஸ்தி சரீர சோஷணம்
பார்யா சமம் நாஸ்தி சரீர தோஷணம்
வித்யா சமம் நாஸ்தி சரீர பூஷணம்
ஒரு மனிதனுக்கு தாயைப் போல் சரீரத்தைப் போஷிக்கச் செய்பவர் யாருமில்லை
கவலையைப் போல் சரீரத்தை துன்புறுத்துவது எதுவுமில்லை.
மனைவியைப் போல் சரீரத்தை சுகப்படுத்துபவர் எவருமில்லை.
கல்வியைப் போல் சரீரத்தை அலங்கரிக்கும் பூஷணம் எதுவுமில்லை.
தினசரி. காம்
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 7
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணூல்புனைகொன்றை
கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொ லாமிவரென்ன
அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ விவர்சார்வே.
விளக்கவுரை :
சினம் பொங்கும் இளநாகத்தைப் பூண்டு, ஒற்றையாடை அணிந்து, ஆமை ஓட்டையும், வெண்மையான பூணூலையும் அணிந்து, தேன்நிறைந்த புதிய கொன்றை மலர்மாலை அணிந்த அழகிய இளைஞர் இவர் என்று சொல்லும்படி இளநங்கையான உமையம்மையை ஒருபாகமாக உடைய திருப்பாச்சிலாச்சிராமத்து உறையும் சங்கொளி போல நீறு அணிந்த திருமேனியை உடைய இறைவரோ இத்தாழ்குழலாள் வருந்தச் சாமர்த்தியமான செயல் செய்வது. இது இவர் பெருமைக்குப் பொருத்தப்படுவதோ?
Seems very attractive.