இன்றைய பஞ்சாங்கம் – மே 07
ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம
!!ஸ்ரீ:!!
श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
சித்திரை~ 24 (7. 5.2024) செவ்வாய் கிழமை.*
வருடம் ~ க்ரோதி வருடம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ சித்திரை மாஸம் { மேஷ மாஸம்}
பக்ஷம் ~ க்ருஷ்ண பக்ஷம்.
திதி ~ 1.17 am வரை சதுர்த்தசி பின் அமாவாஸ்யை
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ 3.19 pm வரை அஸ்வினி பின் பரணி
யோகம் ~ ஆயுஷ் மான்
கரணம் ~ சகுனி
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 5.56
சந்திராஷ்டமம்~ கன்னி
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ அமாவாஸ்யை
இன்று ~ அமாவாஸ்யை.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்
स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
இன்றைய (07-05-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். வரவுகளில் சிறு சிறு போராட்டங்கள் ஏற்படும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். கருத்துகளை சூழ்நிலை அறிந்து வெளிப்படுத்தவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. தெளிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : மாற்றம் உண்டாகும்.
பரணி : விமர்சனங்கள் மறையும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : அசதிகள் நீங்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவுகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக வியாபாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : சஞ்சலமான நாள்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பாராத சில அதிஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் இருந்துவந்த குழப்பம் விலகும். தடைபட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகளின் மத்தியில் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
மகம் : குழப்பம் விலகும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தனம் தொடர்பான விஷயங்களில் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆர்வமின்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
உத்திரம் : சிந்தித்துச் செயல்படவும்.
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
உடன்பிறந்தவர்களின் வழியில் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். பிற மத மக்களின் உதவி கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்நீல நிறம்
சித்திரை : நன்மை உண்டாகும்.
சுவாதி : உதவி கிடைக்கும்.
விசாகம் : எண்ணங்கள் மேம்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
வருவாயில் இருந்துவந்த சில நெருக்கடிகள் குறையும். உறவினர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இழுபறியான சில சரக்குகளால் ஆதாயம் அடைவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : நெருக்கடிகள் குறையும்.
அனுஷம் : ஆதாயம் அடைவீர்கள்.
கேட்டை : முடிவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
சில அனுபவங்களால் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
பெரியோர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வியாபார விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.
அவிட்டம் : தடைகள் விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
அதிரடியான சில வியூகங்கள் மூலம் மேன்மை உண்டாகும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் ஏற்படும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். சில பணிகளை சூழ்நிலை அறிந்து மேற்கொள்ளவும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : கலகலப்பான நாள்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
தினம் ஒரு திருக்குறள்
அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
தினம் ஒரு திருமுறை
மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1
44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .
விளக்கவுரை :
முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?
தினம் ஒரு பாசுரம்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்
முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”
- குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
(கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்
nice information thanks for sharing this learning. I like this one, with this impulse to create a new one.