- Ads -
Home சற்றுமுன் மெட்ரோவில் பயணிப்பவரா..? பரிசோ பரிசு.. செம அறிவிப்பு!

மெட்ரோவில் பயணிப்பவரா..? பரிசோ பரிசு.. செம அறிவிப்பு!

chennai metro rail project

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசுப் பொருள் வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இதுதவிர, மேலும் 30 நாள்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500 மற்றும் ரூ.50 வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும்.

மாதம் ஒரு பரிவா்த்தனைக்கு ரூ.1,500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தோந்தெடுத்து மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும். அதில், 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய பயணிகளைத் தோந்தெடுத்து, மாதாந்திர அதிா்ஷ்ட குலுக்கல் நடத்தப்படும்.

மேலும், இதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.5,000-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1,450 மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

இந்தத் திட்டங்கள் மாா்ச் 31-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version