சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 26ம் தேதி மற்றும் நவம்பர் 9,16,23,30 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரயில் (06001) புறப்பட்டு செல்லும். இந்த ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
அதேபோன்று திருநெல்வேலியில் இருந்து ரயில் (06002) நவம்பர் 18 மற்றும் டிசம்பர் 2ம் தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் காலை 2.45 மணிக்கு தாம்பரத்திற்கு வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 6,13,20,27 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு ரயில்(06007) புறப்பட்டு மறுநாள் காலை 11.05க்கு நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 14,21,28 ஆகிய தேதிகளில் ரயில் (06008), புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
அதைப் போன்று சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் (06011) அக்டோபர் 15ம் தேதி மற்றும் நவம்பர் 5,12,19,26 ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
செங்கோட்டையில் இருந்து ரயில் (06012) அக்டோபர் 16 மற்றும் நவம்பர் 13,20,27 ஆகிய தேதிகளில் காலை 5.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06029) நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து ரயில் (06030) நவம்பர் 4ம் தேதி 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.
மேலும் தாம்பரத்தில் இருந்து ரயில் (06063) அக்டோபர் 22ம் தேதி காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 12.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்றடையும்.
அதைப்போன்று சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் (06005) அக்டோபர் 12,26 மற்றும் நவம்பர் 9ம் தேதி ஆகிய தேதிகளில் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
அதைப்போன்று ரயில் (06006) அக்டோபர் 14ம் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7.20க்கு சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தடையும்.
மேலும் ரயில் (06051) சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 13,20,27 மற்றும் நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு அகமதாபாத் சென்றடையும்.
இதைப் போன்று சென்னை சென்ட்ரல் இருந்து ரயில் (06058) அக்டோபர் 24,31 மற்றும் நவம்பர் 7,14,21,28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
அதைப் போன்று புதுச்சேரியில் இருந்து ரயில் (06010), அக்டோபர் 27, நவம்பர் 10,17,24 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமை காலை 4.30 மணிக்கு சந்திரகாச்சிக்கு சென்றடையும்.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து ரயில் (06026), நவம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும்.
அதைப் போன்று ரயில் (06025) நவம்பர் 3ம் தேதி திருச்சிராப்பள்ளியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு இரவு 8.45 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.