அறந்தாங்கி அருகே மாத்துார் ராமசாமிபுரம் ஊராட்சியில் திமுக சார்பில்
ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ் 650 குடும்பத்தினருக்கு
அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய
பொருளாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.ஆலங்குடி எம்எல்ஏ
மெய்யநாதன் கலந்து கொண்டு 650 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை
வழங்கினார்.இந்நிகழ்வில் ஊராட்சி தலைவர் பழனிமுருகன், மாவட்ட
கவுன்சிலர் சரிதா கவுன்சிலர் சத்யா,ஆயிங்குடி ஊராட்சி தலைவர் சசிகலா,
உட்பட பலர் கலந்து கொண்டனர்.