அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசிவிட்டு பின்னர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் தயாநிதி மாறன். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது விவகாரத்தில், தயாநிதி மாறன் போதிய விளக்கம் அளித்துவிட்டார் என்று கூறினார்.